மேலும்

செம்மணியில் குவியலாக 8 எலும்புக்கூடுகள்- இதுவரை 235 அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இன்று மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இரண்டாவது கட்ட அகழ்வின் 42 ஆவது நாள் அகழ்வுப் பணி, யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் லெனின்குமார் முன்னிலையில்,  இன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, இன்று புதிதாக 4 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. அதையடுத்து இதுவரை அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, ஏற்கனவே இனம்காணப்பட்ட 11 மனித எலும்புக்கூடுகள் இன்று முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டன.

இதையடுத்து இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 224 ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளை எலும்புக்கூடுகள் குவியலாக காணப்பட்ட பகுதியில், 8 மனித எலும்புக்கூடுகள் ஒன்றாக புதைக்கப்பட்டமைக்கான தடயங்கள் இன்று வெளிப்பட்டுள்ளன.

படம்- குமணன் ( எக்ஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *