நாளை புதிய அமைச்சரவை பதவியேற்பு – சட்டம், ஒழுங்கு அமைச்சு இழுபறியில்
புதிய அமைச்சரவை நாளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக பதவியேற்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
“புதிதாக நியமிக்கப்படும் 30 அமைச்சர்களின் பட்டியல் சிறிலங்கா அதிபருக்கு இன்று மாலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் உள்ளிட்ட 15 தொடக்கம் 20 வரையான அமைச்சர்கள் நாளை பதவியேற்பார்கள்.
சட்டம் ஒழுங்கு அமைச்சர் தொடர்பாக இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.
எஞ்சிய அமைச்சர்கள் அடுத்த சில நாட்களில் பதவியேற்பார்கள்“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.