மூத்த ஊடகவியலாளர் சி.குருநாதன் மறைந்தார்
மூத்த ஊடகவியலாளர் சின்னையா குருநாதன் இன்று காலை திருகோணமலையில் காலமானார். தமிழ் , ஆங்கில ஊடகங்களுக்கு திருகோணமலையில் இருந்து இவர் செய்திகள், கட்டுரைகளை எழுதி வந்தார்.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஊடகப் பணியில் ஈடுபட்டிருந்த இவரது மறைவு, ஊடகத்துறைக்குப் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவரது இறுதிச்சடங்கு, வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என்று குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.