கொழும்பு துறைமுகத்தில் இந்திய கடற்படையின் ஆய்வுக் கப்பல்
இந்திய கடற்படையின் நீர்ப்பரப்பு ஆய்வுக் கப்பலான ஐஎன்எஸ் தர்ஷக் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து சமுத்திரவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காகவே இந்தக் கப்பல் சிறிலங்காவை வந்தடைந்துள்ளது.
இரண்டு மாதங்கள் இந்த ஆய்வுகள் இடம்பெறவுள்ளன. வரும் மார்ச் 30 ஆம் நாள் வரை இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.