பாகிஸ்தான் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் – சிறிலங்காவுக்கு இந்தியா எச்சரிக்கை
கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் முன்பாக கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் தூதரகத்தின் ஏற்பாட்டில், காஷ்மீர் தொடர்பாக இந்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டமை தொடர்பாக, சிறிலங்காவிடம் இந்தியா அதிகாரபூர்வமற்ற வகையில் கவலை தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிராக இலங்கையர்கள் அல்லது வேறு நபர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதற்கு இந்தியா எதிர்ப்புகள் எதையும் தெரிவிக்கவில்லை.
ஆனால், சிறிலங்காவை இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களுக்கு பாகிஸ்தான் பயன்படுத்துவது குறித்தே, சிறிலங்கா அதிகாரிகளிடம் இந்தியா கவலை தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபோன்ற இராஜதந்திர நெறிமுறைகளுக்கு மாறான செயற்பாடுகள் விரும்பத்தகாத போக்கு ஒன்றை ஏற்படுத்தும் என்றும் இந்தியா எச்சரித்துள்ளது.