ரணில் உடல்நிலை மோசம்- தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு தேசிய மருத்துவமனையின் துணை பணிப்பாளர் மருத்துவர் ருக்ஷன் பெல்லன, இதனைத் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை காரணமாக, அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்ற மருத்துவர்கள் பரிந்துரைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து அவர் மாற்றப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
