செம்மணியில் இன்றுவரை 126 எலும்புக்கூட்டுகள் அடையாளம்
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிகளில் இருந்து இன்று மேலும் 4 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் 28ஆவது நாள் அகழ்வு இன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட நீதிவான் ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் இடம்பெற்ற இந்த அகழ்வுப் பணியின் போது, இன்று பதிதாக 4 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, இதுவரை அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை, 126 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை இன்று ஏற்கனவே இனங்காணப்பட்ட 5 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளது.