மேலும்

மாதம்: April 2025

கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்துக்குள் கால் வைக்கிறது இந்தியா

கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தில் உள்ள, 51சதவீத உரிமைப் பங்குகளை, ஜப்பானின் ஓனோமிச்சி டொக்யார்ட் நிறுவனம், இந்திய நிறுவனத்துக்கு விற்பனை செய்வதை தடுக்குமாறு, முன்னிலை சோசலிசக் கட்சி சிறிலங்கா அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

சீன உர மோசடி – விவசாய அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் கைது

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், சீனாவில் இருந்து, இயற்கை உரத்தை இறக்குமதி செய்வதில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பாக, விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மன்பில கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர்கள் சிவராம், ரஜீவர்மன் நினைவு நிகழ்வில் நீதி கோரி போராட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வும், இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

சிறிலங்கா- பாகிஸ்தான் பாதுகாப்புக் கலந்துரையாடல் இன்று ஆரம்பம்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நெருக்கடி தீவிரமடைந்துள்ள சூழலில், 5 ஆவது  சிறிலங்கா – பாகிஸ்தான் பாதுகாப்புக் கலந்துரையாடல், இன்று ஆரம்பமாகவுள்ளது.

விரைவில் கொழும்பு வருகிறார் சீன வர்த்தக அமைச்சர்

சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்டோ  (Wang Wentao) விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று ஆய்வுகளை தொடங்குகிறது ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழு

ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த அதிகாரிகளைக் கொண்ட கண்காணிப்புக் குழு இன்று முதல் சிறிலங்காவில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

சிந்து நதி நீரை நிறுத்தும் இந்தியா – சிறிலங்காவுக்கு ஒரு பாடம்

பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் உடன்பாட்டை நிறுத்தி வைப்பதாக இந்தியா விடுத்த அறிவிப்பு, சிறிலங்காவுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது என, முன்னாள் அமைச்சரும், பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்தியா- பாகிஸ்தான் நெருக்கடியில் சிறிலங்கா யார் பக்கம்?

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நெருக்கடி உருவாகியுள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்கம் இந்த விவகாரத்தில் நடுநிலை வகிப்பதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிலேயே தங்கியது சிறிலங்கா குழு- பேச்சுக்களை தொடர முடிவு.

அமெரிக்காவுடன், பேச்சு நடத்துவதற்கு சென்ற சிறிலங்காவின் உயர்மட்டக் குழுவினர், அங்கேயே தங்கியிருந்து உடன்பாடு ஒன்றை எட்டுவதற்கு முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூடப்படுகிறது பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகம்- ட்ரம்ப் அரசு முடிவு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கும், பணியகங்களை மூடுவதற்கு டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.