விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட காணிகளில் இராணுவ வேலி
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில், சிறிலங்கா படையினரின் நீண்டகால ஆக்கிரமிப்பில் இருந்த காணிகள், விவசாய நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதும், அந்தக் காணிகளை சிறிலங்கா படையினர் தொடர்ந்தும் தமது கண்காணிப்பில் வைத்துள்ளதால் உரிமையாளர்கள் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.