மேலும்

நாள்: 6th October 2019

கோத்தாவின் குடியுரிமை – சவால் விடுத்தவர்களுக்கு கொலை அச்சுறுத்தல்

கோத்தாபய ராஜபக்சவின் சிறிலங்கா குடியுரிமையை சவாலுக்குட்படுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்த சிவில் செயற்பாட்டாளர்களான காமினி வியாங்கொட மற்றும் பேராசிரியர் சந்ரகுப்த தெனுவர ஆகியோருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

‘மக்கள் மேடை’யில் இருந்து ஓடி ஒளிந்த கோத்தா

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களை ஒரே மேடையில் – பொதுவான பிரச்சினைகளுக்கான தீர்வை முன்வைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் மேடை எனப்படும், விவாத நிகழ்வில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச பங்கேற்கவில்லை.

போட்டியிட இன்று கடைசி வாய்ப்பு – நாளை வேட்புமனுத் தாக்கல்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கான கடைசி வாய்ப்பு இன்று நண்பகலுடன் நிறைவடையவுள்ளது.

முடிவெடுக்கும் அதிகாரம் மைத்திரியிடம் – இன்று காலை அறிவிப்பார்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை, அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு  தீர்மானித்துள்ளது.

மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழ்க் கட்சிகள் சந்திப்பு – பொது இணக்கத்துக்கு முயற்சி

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ் மக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கில், தமிழ் அரசியல் கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து, யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.