முடிவெடுக்கும் அதிகாரம் மைத்திரியிடம் – இன்று காலை அறிவிப்பார்
சிறிலங்கா அதிபர் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை, அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.
நேற்றிரவு நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை 11 மணிக்கு தமது முடிவை அறிவிப்பார் என, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அதேவேளை, கோத்தாபய ராஜபக்சவின் பேச்சாளரான டலஸ் அழகப்பெரும, சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான கூட்டணி குறித்து வரும் 9ஆம் நாள் புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி என்ற பெயரில், கூட்டணியை அமைத்து, வேறொரு சின்னத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.