இந்திய – சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி முடிந்தது
இந்திய – சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையில் விசாகப்பட்டினத்தில் நடந்து வந்த SLINEX 2019 கூட்டுப் பயிற்சி நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
இந்த இருதரப்பு கூட்டுப் பயிற்சி கடந்த 7ஆம் நாள் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய கடற்படைத் தளத்தில் ஆரம்பமானது.
இதில் சிறிலங்கா கடற்படையின் சார்பில், சிந்துரால, சுரனிமல ஆகிய போர்க்கப்பல்கள், சுமார் 300 வரையான கடற்படையினருடன் பங்கேற்றிருந்தன.
2005ஆம் ஆண்டு தொடக்கம் இந்திய – சிறிலங்கா கடற்படைகள் SLINEX என்ற பெயரில் கூட்டுப் பயிற்சிகளை நடத்தி வருகின்றன.
இந்த ஆண்டு ஏழாவது முறையாக இந்தக் கூட்டுப் பயிற்சி இடம்பெற்றுள்ளது.