27 வாக்குகளால் நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக ஜேவிபியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை சற்று முன்னர், 27 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
நேற்றும் இன்றும் நடந்த விவாதங்களை அடுத்து, இன்று மாலை 6.35 மணியளவில் நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக 119 வாக்குகள் அளிக்கப்பட்டன. ஆதரவாக 92 வாக்குகளே கிடைத்தன.
இதனால் 27 மேலதிக வாக்குகளால் நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக ஐதேக மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஜேவிபி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கூட்டு எதிரணி உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.