தாஜ் சமுத்ரா விடுதியில் தங்கியிருந்தவர்களின் பட்டியலை கோரும் தெரிவுக்குழு
சிறிலங்காவில் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற ஏப்ரல் 21ஆம் நாள், தாஜ் சமுத்ரா விடுதியில் தங்கியிருந்தவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலையும், அங்கு காலையுணவு சாப்பிட்டவர்களின் பட்டியலையும் சமர்ப்பிக்குமாறு, நாடாளுமன்ற தெரிவுக்குழு கோரியுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நேற்றைய அமர்வின் போது, தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்தா குமாரசிறி இதனை தெரிவித்தார்.
ஏப்ரல் 21ஆம் நாள் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள், தாஜ் சமுத்ரா விடுதியில் குண்டை வெடிக்க வைக்கும் திட்டத்தை ஏன் கைவிட்டனர் என்ற கேள்விக்கான விசாரணைகளை முன்னெடுக்க இந்தப் பட்டியல் உதவும் என்றும் அவர் கூறினார்.