மேலும்

சஜித் பிரேமதாச தான் அடுத்த அதிபர் – அடித்துச் சொல்கிறார் தலதா

அமைச்சர் சஜித் பிரேமதாச நிச்சயமாக நாட்டின் அடுத்த அதிபராக இருப்பார் என்று  சிறிலங்காவின் நீதி அமைச்சர் தலதா அத்துகோரள  தெரிவித்தார்.

பங்கிரிய பகுதியில் 204ஆவது மாதிரிக் கிராமத்தை நேற்று திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆசியுடன்,  சஜித் பிரேமதாச அதிபர்  தேர்தலில் போட்டியிட எமது கட்சி  வாய்ப்பளிக்கும்.

அவர் அதிபராக  வருவதை நாம் அனைவரும் எதிர்பார்த்திருக்கிறோம். அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் .” என்றும் அமைச்சர் தலதா அத்துகோரள  கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *