மேலும்

மைத்திரியே வேட்பாளர் – என்கிறார் மகிந்த

அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், வரும் அதிபர் தேர்தலில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவே, நிச்சயமாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

“சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு இல்லாமல் எந்த வேட்பாளரும் வெற்றி பெற முடியாது என்பதால், பொதுஜன பெரமுன தமது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவையே தெரிவு செய்யும்.

மைத்திரிபால சிறிசேனவை சுதந்திரக் கட்சி விரைவில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கும்.

2018 உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்ற 1.7 மில்லியன் வாக்குகளை யாரும் புறக்கணிக்க முடியாது.

இந்தத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியே, ‘கிங் மேக்கராக’ இருக்கும் என்பதில் சந்தேகமில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *