போர்க்குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு – அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு
போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சிறிலங்கா படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் பொதுமன்னிப்பு அளிக்கக் கோரும் அமைச்சரவைப் பத்திரம் ஒன்று, சிறிலஙகா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைச்சரவைப் பத்திரத்தை, அமைச்சரவையில் தாம் சமர்ப்பித்திருப்பதாக, மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சரான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இரண்டு தரப்பிலும் போர்க்குற்றங்களை இழைத்தவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் பொதுமன்னிப்பு அளிக்கக் கோரும் வகையில் இந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.