சிறிலங்கா மீண்டும் மோதல்களுக்குள் சிக்க நேரிடும் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை
இனப்போரின் இறுதிக்கட்டங்களில் நிகழ்ந்த மோசமான குற்றங்களுக்கு தீர்வு காணப்படாவிடின் சிறிலங்கா மீண்டும் மோதல்களுக்குள் சிக்க நேரிடும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையார் எச்சரித்துள்ளார்.