மேலும்

விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – மே 23, 31இல் விசாரணை

வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்வரும் மே மாதம் 23ஆம், 31ஆம் நாள்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதென மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் பதவி நீக்கப்பட்டதை இடைநிறுத்தி வைத்து, அவரை தொடர்ந்தும் அமைச்சராக செயற்பட இடமளிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவை செயற்படுத்த தவறினார்கள் என, வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்கள் அனந்தி சசிதரன், சிவனேசன் ஆகியோருக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்திருந்தார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று, விக்னேஸ்வரன் தரப்பு அடிப்படை எதிர்ப்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தது.

அந்த எதிர்ப்பு மனுவை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வரை விசாரணையை ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில் இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிப்பதற்கான நாள் அறிவிக்கப்பட்டது. மே 23, மற்றும் 31ஆம் நாள்களில் இந்த விசாரணை இடம்பெறும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *