மேலும்

‘எம்மை ஏன் கைவிட்டீர்கள்?’ – சிறிலங்கா அதிபரிடம் முல்லைத்தீவில் கேள்வி

‘எம்மை ஏன் கைவிட்டீர்கள்’ என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கேள்வி எழுப்பி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று முள்ளியவளையில் போராட்டம் நடத்தினர்.

முல்லைத்தீவு- முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் நடந்த நிகழ்வில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் பங்கேற்றார்.

இதன்போது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிறிலங்கா அதிபரிடம் கேள்வி எழுப்பும் வகையிலான வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகள், பதாதைகளுடன் கூடி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

”நாட்டின் ஜனாதிபதியே, எம்மை ஏன் கைவிட்டீர்கள்?” என்று பெரிய பதாதை ஒன்றையும் அவர்கள் வைத்திருந்தனர்.

சிறிலங்கா காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தடுக்க முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.

அதேவேளை, கிளிநொச்சியில் உள்ள யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீட வளாகத்தில் மரக்கன்றுகளை நாட்டும் நிகழ்வில் பங்கேற்க வந்த சிறிலங்கா அதிபரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் நடத்த முயன்றனர்.

எனினும், அவர்களை பல்கலைக்கழக வளாகப் பகுதிக்கு செல்ல சிறிலங்கா காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. இதனால், ஏ-9 வீதியிலேயே அவர்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *