மேலும்

முல்லைத்தீவு செல்கிறார் சிறிசேன – எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஏற்பாடு

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வார நிகழ்வுகளை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

ஜனவரி 21ஆம் நாள் தொடக்கம், 28ஆம் நாள் வரை தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் இன்று நடைபெறவுள்ள இது தொடர்பான ஆரம்ப நிகழ்வில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவுள்ளார்.

இந்த நிகழ்வில் பங்கேற்க வரும் சிறிலங்கா அதிபருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முள்ளியவளையில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

கேப்பாப்பிலவில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் நடத்தி வரும் மக்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும்,  இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *