மேலும்

குற்றவியல் பிரேரணை தான் ஒரே வழி – மங்கள சமரவீர

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மீது குற்றவியல் பிரேரணை கொண்டு வருவது தான்  ஒரே வழி என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றிய பின்னரே, அவர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.

“சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில், மைத்திரிபால சிறிசேன நிகழ்த்திய உரை, அவர் ஆட்சி நடத்த தகுதியற்றவர் என்பதை, சந்தேகமின்றி நிரூபிக்கிறது.

பொய்கள், அதற்கு மேல் பொய்கள், உணர்ச்சிவாதம், தவறான முடிவு என்று அவரது நிலை உள்ளது. இந்தநிலையில் குற்றவியல் பிரேரணை மாத்திரமே,  சிறிலங்காவுக்கு உள்ள ஒரே வழி” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *