அரசிதழ் அறிவிப்புக்காக தயார் நிலையில் அரசாங்க அச்சகம்
அவசர அரசிதழ் அறிவித்தல்களை வெளியிடுவதற்காக நேற்றுக்காலை தொடக்கம், அரசாங்க அச்சப் பணியகம் தயார் நிலையில் இருப்பதாக, அதன் தலைமை அதிகாரியான கங்க லியனகே தெரிவித்துள்ளார்.
எந்த நேரத்திலும், முக்கியமான அரசிதழ் அறிவிப்புகளை வெளியிட வேண்டியிருக்கும் என்றும், அரசாங்க அச்சக பணியாளர்களை தயாராக வைத்திருக்கும் படியும், அதிபர் செயலகமும், சபாநாயகர் செயலகமும், தமக்கு தகவல் அனுப்பியதாக அவர் கூறினார்.
எனினும், நேற்று மாலை வரை, எந்த அரசிதழ் அறிவிப்பும் அரசாங்க அச்சக திணைக்களத்துக்கு கிடைக்கவில்லை.
நொவம்பர் 16ஆம் நாள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு, அரசிதழ் மூலம் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.