சிறிலங்காவின் அரசியல் நெருக்கடி – மைத்திரியுடன் பேசினார் ஐ.நா பொதுச்செயலர்
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் தொடர்பான, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் பேச்சு நடத்தியுள்ளார்.
இதன்போது, அரசியலமைப்புக்கு அமைவாக செயற்பாடுகள் இடம்பெறுவதை உறுதி செய்யுமாறும் – ஜனநாயகத்தின் விழுமியங்களை பாதுகாக்குமாறும் ஐ.நா பொதுச்செயலர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, அரசியலமைப்புக்கு அமைவாகவே, புதிய பிரதமரின் நியமனம் மேற்கொள்ளப்பட்டது என்று ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசிடம், தாம் உறுதி அளித்துள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று தெரிவித்துள்ளார்.
இந்த உரையாடல், மிகவும் வெற்றிகரமானதாக இருந்தது என்றும், சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.