மேலும்

மகிந்தவைச் சந்தித்தார் பாகிஸ்தான் தூதுவர்

சிறிலங்காவின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவையும், சபாநாயகர் கரு ஜெயசூரியவையும், பாகிஸ்தான் தூதுவர் கலாநிதி சாஹிட் அகமட் ஹஸ்மட் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்புகளின் போது, சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்துப் பேசப்பட்டுள்ளது.

இதன்போது, அரசியலமைப்புக்கும், ஜனநாயகத்தை வலுப்படுத்தும் செயல்முறைகளுக்கும் பாகிஸ்தான் ஆதரவளிக்கும் என்று சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் நிலைமைகள், அமைதியான முறையிலும், சிறிலங்கா மக்கள் மற்றும் அரசியலமைப்புக்கு அமைய சமாளிக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்காவின் பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்ட பின்னர், அவரைச் சந்தித்துள்ள, இரண்டாவது வெளிநாட்டுத் தூதுவர் இவராவார்.

முன்னதாக, கடந்த சனிக்கிழமை சீனத் தூதுவர் செங் ஷியுவான், மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *