மேலும்

அமெரிக்கா உள்ளிட்ட 4 நாடுகளின் புதிய தூதுவர்கள் சிறிலங்கா அதிபரிடம் நியமனங்களை கையளிப்பு

அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் புதிய தூதுவர்கள் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், தமது நியமனப் பத்திரங்களை சமர்ப்பித்தனர்.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ், ஜப்பானிய தூதுவர், அகிரா சுகியாமா,  பிரான்ஸ் தூதுவர் எரிக் லவேர்டு, ஆப்கானிஸ்தான் தூதுவர், அஷ்ரப் ஹைடாரி ஆகியோரே இன்று சிறிலங்கா அதிபரிடம் நியமனங்கள் தொடர்பான ஆவணங்களை கையளித்தனர்.

இந்த நிகழ்வில் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகமவும் கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *