மேலும்

தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அரசியல் கைதிக்கு ஒரு மணி நேரம் அனுமதி

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 13 ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதி ஒருவர் நேற்று தமது தந்தையாரின் இறுதிச்சடங்குகளில் பங்கேற்ற ஒரு மணி நேரம் அனுமதிக்கப்பட்டார்.

கிளிநொச்சி செல்வநகரைச் சேர்ந்த ரி.சிவகுமார் என்ற அரசியல் கைதி, கடந்த 13 ஆண்டுகளாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவரது தந்தையார்  காலமானதை அடுத்து, கிளிநொச்சியில் நேற்று நடந்த இறுதிச் சடங்கில் பங்கேற்க சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டார்.

சுமார் ஒரு மணிநேரம் மாத்திரம், இறுதிச்சடங்கிற்கான அனுமதிக்கப்பட்ட அவரை பின்னர், சிறைச்சாலை அதிகாரிகள் மீண்டும் அழைத்துச் சென்றனர்.

இவருக்கு மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளும், இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *