மேலும்

சிறிலங்கா இராணுவத்துக்கு தகவல்களை வழங்கக்கூடாது – முதலமைச்சர் உத்தரவு

தமது ஆலோசனையைப் பெறாமல், சிறிலங்கா இராணுவத்தினர் கேட்கும் எந்த தகவலையும் வழங்கக் கூடாது என்று, வட மாகாணசபை அதிகாரிகளுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர்.சி.வி.விக்னேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத்தெரிவித்தார்.

“சிறிலங்கா இராணுவத்தினர் எந்தத் தகவலையாவது கேட்டால், எனது அனுமதியின்றி எந்த தகவலையும் வழங்கக் கூடாது என்று நான் உத்தரவிட்டுள்ளேன் என்று அவர்களுக்குக் கூறுங்கள்.

மத்திய அரசாங்கம், மாகாணசபை, மற்றும் ஆளுனர் நடத்தும் நிர்வாகம் என்று மூன்று வகையான நிர்வாக நடைமுறைகளால் பொதுமக்கள் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்” என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *