மேலும்

அம்பாந்தோட்டையை தருமாறு சீனா அழுத்தம் கொடுக்கவில்லை – சிறிலங்கா பிரதமர்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை கையளிக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு சீனா கடுமையான அழுத்தங்களைக் கொடுத்தது என்ற குற்றச்சாட்டை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.

முன்னைய ஆட்சிக்காலத்தில் பெறப்பட்ட கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்த போது, அம்பாந்தோட்டை துறைமுகத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு சீனா கடுமையான அழுத்தங்களைக் கொடுத்தது என்று நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்டிருந்த கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பாக சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,  “இந்த விடயத்தில் சீன அரசாங்கம் எந்த சிறிலங்காவுக்கு அழுத்தங்களைக் கொடுக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *