கரும்புலிகள் நினைவு கூரல்- அடையாளம் காணும் முயற்சியில் சிறிலங்கா காவல்துறை
கரும்புலிகள் நாளை முன்னிட்டு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் நேற்று அங்காங்கே சில நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரும்புலிகள் நாளை முன்னிட்டு முதல் கரும்புலி தாக்குதல் நடத்தப்பட்ட நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம் முன்பாக நினைவேந்தல் பதாதை கட்டப்பட்டு, நினைவுச்கூடர் ஏற்றப்பட்டது.
அதேபோன்று வேறும்பல இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
அதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில், அக்கராயன்குளம் பகுதியில் பேருந்து தரிப்பிடம் மற்றும் ஆலயம் ஆகியவற்றில் விடுதலைப் புலிகளின் சின்னத்துடன் கரும்புலிகளை நினைவு கூரும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அத்துடன் கிளிநொச்சியில் பல இடங்களில் வீதிகளிலும், சுவர்களிலும் புலிச் சின்னம், தமிழீழ வரைபடம் என்பன வரையப்பட்டிருந்ததாகவும் சிறிலங்கா காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதனுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.