சிறிலங்காவில் சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக உயர்மட்டக் குழு
சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயர்மட்டக் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உதவித் தலைவர் லெப்.ஜெனரல் ஷியாவோ தியன்லியாங் தலைமையிலான இந்தக் குழுவினர், இன்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில் வைத்தியரத்னவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
இந்தச் சந்திப்பில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணைப்பதிகாரி மேஜர் ஜெனரல் ரணவக்கவும் கலந்து கொண்டார்.