மேலும்

காதர் மஸ்தானிடம் இருந்து மீளப் பெறப்பட்டது இந்து சமய விவகாரம்

இந்து சமய விவகார பிரதி அமைச்சர் பதவி, காதர் மஸ்தானிடம் இருந்து மீளப் பெறப்பட்டுள்ளது.

அண்மையில் புதிய இராஜாக, பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட போது, புனர்வாழ்வு, புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி, மற்றும் இந்துசமய விவகாரங்கள் பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டார்.

அதற்கு இந்து சமய அமைப்புகள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியது.

இதையடுத்து,நேற்று சிறிலங்கா அதிபர் செயலகத்துக்கு அழைக்கப்பட்ட காதர் மஸ்தானிடம் இருந்து, இந்து சமய விவகார பிரதி அமைச்சர் பொறுப்பு நீக்கப்பட்டது.

அதையடுத்து. அவர. மீள்குடியேற்ற, புனர்வாழ்வு, மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சராக மாத்திரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ, அமைச்சர் சுவாமிநாதனுக்கு இதனைத் தெரியப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *