மேலும்

மாதம்: May 2018

ஒரு இலட்சம் சீனர்களை சிறிலங்காவுக்கு இழுக்க புரிந்துணர்வு உடன்பாடு

அடுத்த 12 மாதங்களில் ஒரு இலட்சம் சீன சுற்றுலாப் பயணிகளை சிறிலங்காவுக்கு ஈர்க்கும் வகையில், சீன நிறுவனம் ஒன்றுடன் சிறிலங்கா அரசாங்கம் உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

ஐதேகவில் மீண்டும் குழப்பம் – பின்வரிசை உறுப்பினர்கள் போர்க்கொடி

ஐதேகவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கட்சித் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெறும் கூட்டங்களைப் புறக்கணிக்கப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

‘புனுகுப் பூனை’க்குப் பொருத்தமான பதவி – பொன்சேகாவைக் கிண்டலடிக்கும் நாமல்

அமைச்சரவை மாற்றத்தின் போது, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு மாத்திரமே விஞ்ஞான முறையின் அடிப்படையில் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆறுமுகன் தொண்டமானுக்கும் அமைச்சர் பதவி?

இதொகா தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கும் சிறிலங்கா அமைச்சரவையில் இடமளிக்கப்படவுள்ளது. அமைச்சராகப் பதவியேற்குமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் மே நாள் பேரணிகள்

உலகத் தொழிலாளர் நாளை முன்னிட்டு, நேற்று வடக்கு கிழக்கில் பல்வேறு மே நாள் பேரணிகள் அரசியல் கட்சிகளின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றன.

சிறிலங்காவில் 18 அமைச்சர்கள் பதவியேற்பு – விஜேதாச உள்ளே, ரவி வெளியே

சிறிலங்காவில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பின் போது, 18 அமைச்சர்கள் புதிய அல்லது மேலதிக அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர்.

திருகோணமலையில் சிறிலங்கா படையினருக்கு பயிற்சி அளிக்கும் அமெரிக்க கடற்படை

பசுபிக் ஒத்துழைப்பு-2018 திட்டத்தின் கீழ், திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்துள்ள அமெரிக்க கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான யுஎஸ்என்எஸ் மேர்சி, சிறிலங்காப் படையினருக்கு பயிற்சிகளையும் அளித்து வருகிறது.

முழுமையான மாற்றம் நடக்காது – ஒஸ்ரின் பெர்னான்டோ

சிறிலங்காவில் ஆட்சியில் உள்ள கூட்டு அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று மேற்கொள்ளப்படவுள்ள மாற்றம், முழுமையான அமைச்சரவை மாற்றமாக இருக்காது என்று சிறிலங்கா அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் ‘16 பேர் அணி’க்கு அழைப்பு இல்லை

கூட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறிய  சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வுக்கான அழைப்புகள் அனுப்பப்படவில்லை.

மேலும் 10 சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று எதிர்க்கட்சிக்கு தாவுகின்றனர்?

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்று எதிரணிக்குத் தாவவுள்ளனர் என்று, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.