மேலும்

சுதந்திரக் கட்சியின் ‘16 பேர் அணி’க்கு அழைப்பு இல்லை

கூட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறிய  சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வுக்கான அழைப்புகள் அனுப்பப்படவில்லை.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி- ஐதேக கூட்டு அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்படவுள்ளது.

புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்கவுள்ள நிலையில், அனைத்து அமைச்சர்களுக்கும் நேற்று அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன.

அண்மையில் கூட்டு அரசாங்கத்தை விட்டு விலகிய, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், இன்றைய நிகழ்வில் பங்கேற்பர் என்று அந்தக் கட்சியின் அமைச்சரான மகிந்த அமரவீர கூறியிருந்தார்.

எனினும், அரசாங்கத்தை விட்டு விலகி, எதிரணியில் அமரவுள்ள 16 பேருக்கும். அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று, அந்த அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *