மேலும்

நாள்: 6th May 2018

கைது செய்யப்பட்ட அதிகாரிகளுடன் இலஞ்சப் பணத்தை பகிரவிருந்த முக்கிய பிரமுகர்

சிறிலங்கா அதிபரின் செயலக தலைமை அதிகாரி மகாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபன தலைவர் திசநாயக்க ஆகியோரால் பெறப்பட்ட இலஞ்சப் பணத்தில் ஒரு பகுதி முக்கிய பிரமுகர் ஒருவருக்கும் பங்கிடப்படவிருந்ததாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

படகு மூலம் தாயகம் திரும்பிய 14 அகதிகள் சிறிலங்கா கடற்படையினரால் கைது

தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பிக் கொண்டிருந்த 14 தமிழ் அகதிகளை வடக்கு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினர் நேற்று அதிகாலை கைது செய்தனர்.

சபாநாயகர் ஆசனத்தில் அமரும் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த மாதம் முடக்கப்பட்ட சிறிலங்கா நாடாளுமன்றத்தின் அமர்வு மீண்டும் நாளை மறுநாள் ஆரம்பமாகவுள்ளது.

உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு 135 மில்லியன் ரூபா மாதாந்த கொடுப்பனவு

உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள  8,691 உறுப்பினர்களுக்கும், மாதம்தோறும், 135 மில்லியன் ரூபா கொடுப்பனவாக வழங்கப்பட்டு வருவதாக உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எண்ணெய்க் கப்பலில் பயணித்த 130 இலங்கையர்கள் மலேசியாவில் கைது

அவுஸ்ரேலியா, நியூசிலாந்து நோக்கி பயணம் செய்த எண்ணெய்க் கப்பல் ஒன்றில் இருந்து 130 இலங்கையர்கள் மலேசியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.