மேலும்

நாள்: 26th May 2018

அமெரிக்காவின் பாரிய கடற்படை கூட்டுப் பயிற்சி – சிறிலங்கா கடற்படைக்கு முதல்முறையாக அழைப்பு

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்கா நடத்தி வரும் பாரிய கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் முதல்முறையாக சிறிலங்கா கடற்படையும் பங்கேற்கவுள்ளது.

சீன அபிவிருத்தி வங்கியிடம் 1 பில்லியன் டொலர் கடன் வாங்குகிறது சிறிலங்கா

சீன அபிவிருத்தி வங்கியிடம் இருந்து சிறிலங்கா அரசாங்கம் 1 பில்லியன் டொலர் கடனைப் பெறவுள்ளது. இந்த ஆண்டில் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்களுக்கான கொடுப்பனவுகளை கொடுத்துத் தீர்க்கவே, சிறிலங்கா அரசாங்கம் இந்தக் கடனைப் பெறவுள்ளது.

கோத்தாவுக்காக கட்டுப்பணம் செலுத்த தயார் – சரத் பொன்சேகா

வரும் அதிபர் தேர்தலில் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச போட்டியிட்டால், அவருக்காக கட்டுப்பணத்தை செலுத்த தான் தயார் என்று சிறிலங்கா அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிப்பது குறித்து மலிக் சமரவிக்ரமவுடன் சீனத் தூதுவர் பேச்சு

முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பாக, சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான், சிறிலங்காவின் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் அனைத்துலக வணிக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

நினைவேந்தலில் பங்கேற்ற அதிகாரிகளை பணிநீக்கிய வங்கியைப் புறக்கணிக்கும் போராட்டம் தீவிரம்

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை கடந்த 18ஆம் நாள் நினைவு கூர்ந்த வங்கி அதிகாரிகள் இருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதைக் கண்டித்து, குறித்த வங்கியில் கணக்குகளை வைத்திருந்த வாடிக்கையாளர்கள் பலரும், தமது கணக்குகளை மூடி எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

அர்ஜூன் அலோசியசிடம் 10 மில்லியன் ரூபா பெற்றதை ஒப்புக்கொண்டார் தயாசிறி

மத்திய வங்கி பிணைமுறி மோசடிக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியசின் வோல்ட் அன் றோ அசோசியேட்ஸ் நிறுவனத்திடம் இருந்து  தாம் 10 மில்லியன் ரூபாவைப் பெற்றதாக ஒப்புக்கொண்டுள்ளார் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர.

பாதுகாப்பு நிலைமைகள் குறித்த சிங்கள நாளிதழ்களின் செய்தி – சிறிலங்கா அதிபர் விசாரணைக்கு உத்தரவு

தேசிய பாதுகாப்புத் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் கரிசனை கொண்டிருப்பதாக, இரண்டு சிங்கள நாளிதழ்களில் நேற்று வெளியாகிய செய்தி தொடர்பாக விசாரணைகளை நடத்துமாறு சிறிலங்கா காவல்துறை மா அதிபருக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.