மேலும்

பதவி விலகுமாறு சிறிலங்கா அதிபர் கோரவில்லை – ரணில்

ranil-wickramasinghe-maithripala-sirisenaபிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தம்மிடம் கோரவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

“பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு சிறிலங்கா அதிபர் என்னிடம் எந்தக் கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. எனவே, தொடர்ந்து நான் பிரதமராகப் பதவி வகிப்பேன்.

ஐக்கிய தேசியக் கட்சியிலும் கூட யாரும் என்னைப் பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறோ,  கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறோ கோரவில்லை.

கடந்த 45 ஆண்டுகளாக அரசியல் கட்சிகள் தனிநபர்களைச் சுற்றியே கட்டியெழுப்பப்பட்டுள்ளன. ஐதேக இதனை மாற்ற விரும்புகிறது.  தலைமைத்துவ சபை ஒன்று அமைக்கப்பட்டு, அடுத்த 20 ஆண்டுகளுக்கு அல்லது அதற்கு மேல் கட்சியை வழிநடத்தும் வகையில் மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு, சில ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும், அவர்கள் அதனை நிராகரித்திருக்கிறார்கள்.” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *