ஆணைக்குழுக்களின் விசாரணை அறிக்கைகள் சபாநாயகரிடம்
மத்திய வங்கி பிணை முறி விசாரணை அறிக்கை மற்றும் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல், மோசடிகள் குறித்து விசாரித்த ஆணைக்குழுவின் அறிக்கை என்பன, சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகரிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைகள் தொடர்பாக விவாதம் நடத்துவது குறித்து, எதிர்வரும் 22 ஆம் நாள் நடத்தப்படும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
பிணைமுறி அறிக்கை ஆங்கிலத்தில் மாத்திரம் உள்ளது. சிங்களம்,மற்றும் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். ஏனைய அறிக்கைகள் சிங்களத்தில் உள்ளன. அவையும் மொழிபெயர்ப்புச் செய்யப்பட வேண்டும்.
நாடாளுமன்றத்தில் நாம் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்வோம். இந்த அறிக்கைகள் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும். ஊடகங்களும் கூட பிரதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்” என்றும் சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.