மேலும்

சிறிலங்காவின் அபிவிருத்தி, நல்லிணக்க செயல்முறைகளுக்கு உதவ ஜப்பான் இணக்கம்

tharo kono -maithriஅபிவிருத்தி மற்றும் நல்லிணக்கச் செயல்முறைகளுக்கு சிறிலங்காவுக்கு முழுமையான ஆதரவை ஜப்பான் வழங்கும் என்று ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தாரோ கோனோ, தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பானி வெளிவிவகார அமைச்சர்  தாரோ கோனோ, நேற்று அதிபர் செயலகத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.

15 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர், நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்களை நேற்று தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

tharo kono -maithri

சிறிலங்கா அதிபருடனான சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர், ”ஜப்பானுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் எற்கனவே சிறந்த வர்த்தக உறவுகள் உள்ளன.

சிறிலங்காவில் மேலும் வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்கு இந்த மாத இறுதியில் ஜப்பானில் இருந்து சிறப்பு குழுவொன்று கொழும்பு வரவுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *