அரசியலமைப்பு சபையில் இருந்து விலகினார் விஜேதாச ராஜபக்ச
அரசியலமைப்பு சபையில் இருந்து விலகிக் கொள்வதாக, சிறிலங்காவின் முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கடிதங்களை அனுப்பியுள்ளார்.
அரசியலமைப்பு சபையின் உறுப்பினராக, முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்சவை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர இரா.சம்பந்தனும் நியமித்திருந்தனர்.
நீதியமைச்சர் பதவியில் இருந்து விலகிய பின்னர் விஜேதாச ராஜபக்ச, அரசியலமைப்பு சபையின் நியமனம், அரசியலமைப்புக்கு விரோதமானது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.