மேலும்

மூன்று மாவட்டங்களில் கூட்டமைப்பு வேட்புமனுக்களை தாக்கல் செய்தது

tnaஉள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று மூன்று மாவட்டங்களில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளது.

கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்குப் போட்டியிடுவதற்கே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நேற்று வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரி, கரைச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளுக்கான தேர்தல்களில் போட்டியிடுவதற்கு, கூட்டமைப்பு சார்பில், தமிழ் அரசுக் கட்சியினால் முகவராக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், கிளிநோச்சி மாவட்டச் செயலகத்தில்  வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்குப் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை ,தமிழ் அரசுக்கட்சியின் முகவரான நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தாக்கல் செய்தார்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்குப் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை வவுனியா மாவட்ட முகரான மாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கம் தாக்கல் செய்தார்.

மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் வேட்புமனுக்கள் தொடர்பாக தமிழ் அரசுக் கட்சிக்கும், புளொட் மற்றும் ரேலோவுக்கும் இடையில் இழுபறிகள் காணப்பட்ட போதும், வேட்புமனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு, யாழ்ப்பாண மாவட்ட வேட்புமனுக்கள் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளன. வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *