மேலும்

மலேசியப் பிரதமரைச் சந்தித்தார் வடக்கு முதல்வர் – இணைந்து செயற்பட இணக்கம்

najib razak- cmமலேசியப் பிரதமர் மொகமட் நஜீப் ரசாக் இன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். கொழும்பில் இன்று முற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக கீச்சகப் பதிவு ஒன்றை இட்டுள்ள மலேசியப் பிரதமர் அப்துல் ரசாக்,

“வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

மாகாணத்தின் மீள் அபிவிருத்திக்கும் அங்குள்ள தமிழ்ச் சமூகத்தை உயர்த்துவதற்கும், ஆதரவளிப்பதில், இணைந்து செயற்படுவதற்கு நாம் இணங்கியுள்ளோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

najib razak- cm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *