மேலும்

சாவகச்சேரியில் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் தனித்துப் போட்டி – கட்டுப்பணம் செலுத்தினார் வரதர்

A.Varatharajaperumalதமிழ் சமூக ஜனநாயக கட்சி என்று பெயரை மாற்றிக் கொண்ட வரதராஜப்பெருமாள் தலைமையிலான பத்மநாபா ஈபிஆர்எல்எவ் சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

யாழ். மாவட்டச் செயலகத்தில் உள்ள தேர்தல் பணியகத்தில், இன்று பிற்பகல் வடக்கு- கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் மற்றும் சுகு சிறிதரன் ஆகியோர் சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தினர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும், உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும், ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இந்தக் கட்சியை இணைத்துக் கொள்வது தொடர்பாக கூட்டமைப்புத் தலைமை இன்னமும் எந்த முடிவையும் அறிவிக்காத நிலையில், தாம் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக, பத்மநாபா ஈபிஆர்எல்எவ் தெரிவித்துள்ளது.

இதற்கமையவே முதற்கட்டமாக சாவகச்சேரி நகரசபைக்கு இந்தக் கட்சி சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *