மேலும்

வடக்கில் 50 முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்குகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

tnaஉள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 50 வரையான முஸ்லிம் வேட்பாளர்களைப் போட்டியில் நிறுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தில், உள்ள பல்வேறு உள்ளூராட்சி சபைகளில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 32 வட்டாரங்கள் உள்ளன. இங்கு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபை, வவுனியா நகரசபை, முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றில் உள்ள இரட்டை உறுப்பினர் தொகுதிகளுக்கு கூட்டமைப்பு சார்பில் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்படவுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள முசலி பிரதேச சபைக்கும் முஸ்லிம் வேட்பாளர்களை கூட்டமைப்பு களமிறக்கவுள்ளதாகவும், வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *