சிறிலங்காவின் இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து நியமனம்
சிறிலங்கா இராணுவத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து நியமிக்கப்பட்டுள்ளார் என்று இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 22 ஆம் நாள் நடைமுறைக்கு வரும் வகையில் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து சிறிலங்கா இராணுவப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இராணுவப் பேச்சாளராக இருந்த மேஜர் ஜெனரல் ரொஷான் செனிவிரத்ன யாழ்ப்பாணத்தில் உள்ள 51 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து, இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிய இராணுவப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து 52 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.