மேலும்

கிளிநொச்சியில் தனித்துப் போட்டியிடுகிறது லங்கா சமசமாசக் கட்சி

tissa vitharanaஉள்ளூராட்சித் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் தமது சொந்தச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடப் போவதாக லங்கா சமசமாசக் கட்சி தெரிவித்துள்ளது.

மகிந்த ராஜபக்ச ஆதரவு சிறிலங்கா பொதுஜன முன்னணியில் இடம்பெற்றுள்ள லங்கா சமசமாசக் கட்சியே, கிளிநொச்சி மற்றும் நுவரெலிய மாவட்டங்களில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

லங்கா சமசமாசக் கட்சியின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே, கிளிநொச்சி, நுவரெலிய மாவட்டங்களில், சாவி சின்னத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளதாகவும் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

எனினும், ஏனைய மாவட்டங்களில் சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்தே தமது கட்சி போட்டியிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *