மேலும்

மணியந்தோட்டம் துப்பாக்கிச் சூட்டுக் கொலை – விசாரணை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைப்பு

shot-dead-ariyalai (2)யாழ்ப்பாணம், அரியாலை கிழக்கில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உந்துருளியில் சென்று கொண்டிருந்த, 27 வயது இளைஞன் ஒருவர், அரியாலை கிழக்கு, மணியந்தோட்டம் பகுதியில் உள்ள உதயபுரம்- கடற்கரை வீதிச் சந்தியில், கடந்த 22ஆம் நாள் சுடப்பட்டு, படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் மரணமானார்.

உந்துருளியில் வந்த இரண்டு பேர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக கூறப்படுகின்ற நிலையில், சந்தேக நபர்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.

இந்த நிலையிலேயே, இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பை காவல்துறை மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *