சிறிலங்கா காவல்துறையில் சேர தமிழர்கள் தயக்கம் – சிறிலங்கா பிரதமர்
சிறிலங்கா காவல்துறை திணைக்களத்தில் சேர்ந்து கொள்வதில் தமிழர்கள் நாட்டம் காட்டுவதில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
‘காவல்துறையில் உள்ள 7000 வெற்றிடங்களில் 10 வீதத்துக்கு தமிழர்களைச் சேர்த்துக் கொள்ள சிறிலங்கா அரசாங்கத் முடிவு செய்துள்ளது. ஆனால் இதற்கான நேர்முகத் தேர்வுக்கு 180 பேரே வந்திருந்தனர்.
காவல்துறை வெற்றிடங்கள் அனைத்தும் வடக்கில் இருந்தே நிரப்பப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இருந்து இதனை ஆராய வேண்டும்.
இது தொடர்பாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோருடன் கலந்துரையாடியிருக்கிறேன்” என்றும் சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார்.