மேலும்

20 ஆவது திருத்தச்சட்ட வரைவு – திட்டமிட்டபடி விவாதம் நடக்குமாம்

mahinda-amaraweeraமாகாணசபைத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டவரைவு,  திட்டமிட்டபடி நாடாளுமன்றத்தில் வரும் 20ஆம் நாள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலருமான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தச் சட்டவரைவின் சட்டபூர்வ தன்மை குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை, சபாநாயகர் கரு ஜெயசூரிய நாளை நாடாளுமன்றத்தில் அறிவிப்பார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அமைந்திருந்தால், மறுநாள், திருத்தச்சட்ட வரைவு தொடர்பான விவாதம் நடத்தப்படும்.

பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தால், கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *