இந்தியத் தூதரகத்தின் புதிய உதவிப் பாதுகாப்பு ஆலோசகர் சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சந்திப்பு
இந்தியத் தூதரக உதவிப் பாதுகாப்பு ஆலோசகராக, லெப்.கேணல் ரவி மிஸ்ரா அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.
சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இருதரப்பு இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தியத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக இந்தியக் கடற்படை அதிகாரிகளே நியமிக்கப்படுவது வழக்கம்.
சிறிலங்காவில் சீனத் தலையீடுகள் அதிகரித்ததை அடுத்து, உதவிப் பாதுகாப்பு ஆலோசகராக, இந்திய இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகளை இந்தியா நியமித்து வருகிறது.